------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

April 18, 2013

உங்கள் பிள்ளைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?


 memory loss homeopathy treatment in chennai



உங்கள்  பிள்ளைகளின் நினைவாற்றலை அதிகரிப்பது எப்படி?
ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று  சொல்வார்கள்  , ஆனால்  நம் குழந்தை  படித்தததை  எல்லாம் மறக்கும் போது  மறதி ஒரு சாபம் போல  நமக்கு தோன்றும் .

நினைவாற்றல்   குறித்து சில  தகவல்கள் :
நாம்  பார்க்கும்  , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும்  அனைத்துமே  நமது  நினைவாற்றல்  ஆகும்இது முதலில் முதலில் குறைந்த  நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி - Sensory Memory). உடனே  மறந்து விடும் .
இந்த சென்சரி  மெமரியில் நாம்  முழு கவனத்தை செலுத்தி  ஆழ்ந்து கவனித்தால்  அது ஷார்ட் டெர்ம் மெமரி – Short Term Memory  ஆக  பதிவாகும் .இதுவும்  சில மணித்துளிகளுக்கு  மட்டும்  இருக்கும் .
ஷார்ட் டெர்ம் மெமரி  திரும்ப திரும்ப  செய்யும்போது  அது நாள் பட்ட  ஞாபக சக்தியாக  மாறும் .

நினைவாற்றலுக்கு மிகவும் முக்கிமானது  இரண்டு :
ü  ஆர்வம் மற்றும்  கவனம்
ü  திரும்ப திரும்ப செய்தல் .

மேலும்  நாள் பட்ட நினைவுகள்  கூட மறக்க  வாய்ப்பு  உள்ளது , இதுவும் நல்லது தான் . சில சமயம்  வாழ் நாள் முழுதும் நினைவில் இருக்கும்.

நாள் பட்ட ஞாபகத்தை  இரண்டு வகையாக  பிரிக்கலாம்  :
Ø  Explicit   என்பது  கொஞ்சம் யோசித்தால்  நினைவுக்கு  கொண்டுவர முடியும்
Ø  Implicit என்பது  யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு  கொண்டு வருதல்


நினவு  திறனை  சிறு உதாரணம் கொண்டு விளக்கலாம் :
மிதி வண்டி ஓட்ட பழகுதலை    எடுத்துகொள்வோம்
Ø  யாரோ  ஓட்டுவதை  நாம் பார்ப்பது - சென்சரி மெமரி
Ø  முதன் முதல் ஓட்ட காற்று கொள்வது  - ஷார்ட் டெர்ம் மெமரி
Ø  தத்தி தத்தி ஓட்டுவது - லாங் டெர்ம்  Explicit மெமரி
Ø  தயவே இல்லாமல்  ஓட்டுவது -லாங் டெர்ம் Implicit மெமரி (சாகும் வரை மறக்காது )

இனி நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்
ü  எதையும்  தாய் மொழியிலேயே  சிந்திக்க வேண்டும் , நீங்கள்  படிப்பது ஆங்கிலமோ , ஹிந்தியோ , பிரெஞ்சோ - உங்கள் தாய் மொழி என்னவோ   அதில் சிந்தித்து  மனதில் பதிய செய்ய வேண்டும்
ü  புரியாமல்  எதையும் படிக்க கூடாது . ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும்  பரவாயில்லை .
ü  முழு கவனம்  மிக அவசியம் .
ü  Mnemonics  வைத்து  படிப்பது ஒரு கலை . அதை உங்கள் குழந்தைக்கு  கற்று  கொடுங்கள்உதரணம்  NEWS - North, East, West, South.
ü  படித்த வுடன் எழுதி  பார்க்கும் பழக்கத்தை  ஏற்படுத்த வேண்டும் . ஹோம் வொர்க் என்ற பெயரில்  கடமைக்கு  எழுதும்  சடங்கு  பயனில்லை.
ü  படங்களுடன் கூடிய  தகவல்கள்  மனதில் பதியும். பட விளக்கங்களை திரும்ப திரும்ப  வரைந்து பார்க்க சொல்லவேண்டும்
ü  நல்ல உறக்கம்  அவசியம் . குறைந்தது  8  மணி நேர தூக்கம்  கண்டிப்பாக தேவை
ü  இரவில்  சீக்கிரம்  தூங்கி  அதிகாலை  படிக்கும்  படி  சொல்லவேண்டும் .
ü  தூங்க போகும்  முன்  அன்று  படித்த  அனைத்தையும்  ஒரு முறை மேலோட்டமாக  நினைவு படுத்தி பார்க்க வேண்டும் . அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும்   நம் மூளையின்  சில மூலைகள் விழிப்புடன் இருந்து  தகவல் களை ஷர்ட் டெர்ம் மெமரியில் இருந்து  லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான  பயிற்சி ஆகும் .
ü  மாவு சத்து உள்ள உணவுகள்  மந்த நிலையை  ஏற்படுத்தும் , எனவே புரதம்  நிறைந்த எளுதில்  செரிக்கும்  உணவை செர்த்துகொள்வது நல்லது.



விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830 (தலைமை அலுவலகம்)
புதுச்சேரி:- 9865212055 (கிளை அலுவலகம்)
பண்ருட்டி:- 9443054168 (கிளை அலுவலகம்)
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்



Contact Form

Name

Email *

Message *