------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

May 10, 2014

Anxiety Disorder Specialty Counseling & Homeopathy treatment in Chennai, Tamil nadu - கவலைக் கோளாறுகள் சிறப்பு உளவியல் ஆலோசனை தமிழ்நாடு,







 Anxiety Disorder - கவலைக் கோளாறுகள்  கவலையும் கவலைக் கோளாறுகளும் • பிரச்சனை அல்லது ஏதேனும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்போது நாம் உணரும் ஒருவகை உணர்ச்சிதான் கவலை (Worries).   • வேலையை சரியான நேரத்தில் செய்துமுடிக்காமை, போக்குவரத்து நெரிச்சலில் சிக்கிக் கொள்ளுதல், தேர்வுகள் எழுத பயம், தேர்வுமுடிவுகள் குறித்த கவலை, முதலிய மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும்போது நமக்கு கவலை தோன்றுகிறது.  • உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே பார்த்தல், குரைத்தபடி கடிக்கவரும். நாயைக் காண்பது போன்ற திடீர் என்று எதிர்பாராத அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது அச்சம் உண்டாகிறது.   • சாதாரனமாக கவலை கொள்ளுவது நல்லதே, ஏனெனில் அது நமது செயல்களை மேம்படுத்தவும், எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களைவதற்கும் உதவும்.  • கவலை அதிகமாகும்போதும், நாம் நமது அன்றாட வேலைகளைச் செய்யும் திறமையை  பாதிக்கும் அளவுக்கு கவலை அதிகமானால் கவலைக் கோளாறுகள் ஏற்படுகின்றன.   • எல்லாவித மனக்கோளாறுகளுக்கும் அடிப்படையானது கவலைக் கோளாறாகும்.  • பெரும்பாலானோர் இதைக் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. ஒருவர் தனது மனவலிமையை பயன்படுத்தி கவலைக் கோளாற்று அறிகுறிகளை அவரால் அடக்கிவிட முடியும் என்று நினைக்கிறார். அறிகுறிகள் போக வேண்டும் என்று விரும்புவது சரியானதல்ல கவலையை நிரந்தரமாக போக்க உளவியல் ஆலோசனையும் .மருத்துவ ஆலோசனையும் வேண்டும்,    சாதாரண கவலைக் கோளாறுகள். சாதாரண கவலைக் கோளறுகள் பலவகைகள் உள்ளன. எனினும் இங்கு பொதுவாக வரும் சில திகில் கோளாறுகள் அச்சக் கோளாறுகள் மட்டும் பார்ப்போம்.  1. பொதுவகை திகில் கோளாறுகள் - Genaralized Anxiety Disorder - GAD ஜெனரலைஸ்ட் ஆங்ஸைட்டி டிஸார்டர் (Genaralized Anxiety Disorder - GAD) என்பது, நாட்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட கவலை, மன உளைச்சலாகும்.   • GAD உள்ள நோயாளிகள், பெரும் அழிவு வரப்போவதாக எதிர்பார்ப்பார்கள். தங்கள் உடல் நலன் குறித்தும், பணம், குடும்பம், பணி முதலியவற்றைக் குறித்தும் அளவுக்கு அதிகமாக கவலை கொள்வார்கள். கவலை என்பது அறிவுக்கு முரணானது என்பதை உணர்ந்தாலும் கவலை போக்க முடியாமலும் அமைதியாக ஓய்வெடுக்க முடியாமலும் தவிப்பார்கள்.   • இவர்களுடைய கவலை, நடுக்கம், வலிப்புநோய், சதை இறுகல், தலைவலி, முன்கோபம், முறைத்துப்பார்த்தல் முதலிய உடல் அறிகுறிகளுடன் இணைந்து வரும்.  • இவர்கள் தலைச்சுற்றல், மூச்சுத்திறைல், குமட்டல் முதலியவற்றை உணர்ந்து அடிக்கடி கழிப்பறைக்குச் செல்வார்கள்.   • GAD தளர்ச்சியை உண்டாக்கி சாதாரண அன்றாட பணிகளைக் கூட செய்ய இயலாதவாறு செய்துவிடும்.  2. அச்சக் கோளாறுகள் – Fear Disorders. அச்சக் கோளாறுகளுடையவர்கள், திடீரென அடிக்கடி அச்ச உணர்வுடன் இருப்பார்கள். அந்த உணர்வு எப்போது உண்டாகும் என்பதை கணிக்க இயலாதவர்கள்.   • ஒவ்வொரு அச்ச உணர்வுகளுக்கும், சாதாரன நிகழ்வுகளுக்கும் இடையே தீவிர கவலையடைவார்கள். அடுத்த அச்ச உணர்வு, நிகழ்வு எப்போது ஏற்படுமோ என்ற கவலையுடனேயே இருப்பார்கள். எந்த நிமிடத்திலும் பயம் ஏற்படக்கூடும் என்ற தொடர்ந்த கவலையுடனேயே இருப்பார்கள்.  • அச்சமூட்டும் பயம் ஏற்பட்டதும் அவர்களுடைய இதயம் கணத்துவிடும். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டும் மயக்கம், தளர்ச்சி, தலைச்சுற்றல் ஏற்படும். அவர்களுடைய கைகள் மரத்துப்போகும்.   • உடலில் வியர்த்துக்கொட்டி சில்லிட்டுப்போகும். மார்பில் உளைச்சல் உணர்வு, திக்குமுக்காடுதல், பொய்மை உணர்வு, எல்லாமே ஊசலாடுவது போன்ற எண்ணம் அச்சம், கட்டுப்பாட்டுத் தன்மை இழுப்பு போன்றவையும் இருக்கும்.   • தனக்கு, மாரடைப்பு ஏற்படுவதைப் போலவும், நெஞ்சு கணத்திருப்பதாகவும் இருப்பதாகவும், தான் மரணத்தின் விளிம்பில் நிற்பதாகவும் பாதிக்கப்பட்டவர் முழுமையாக நம்புவார்.   • பொதுவாக இந்த அச்ச உணர்வுத் தூக்கம் ஏறத்தாழ இரண்டு மூன்று நிமிடங்கள் இருக்கும். சில சமயங்களில் பத்து நிமிடங்கள் வரையில் கூட இருக்கலாம். மிகவும் அரிதாக, ஒரு சிலரிடம் ஒரு மணி, அதற்குமேலும் நீடிக்கலாம்.  • அச்சக்கோளாறு உள்ளவர்கள் பெரும்பாலும் மனச்சோர்வுடனும், மதுவுக்கு அடிமையானவர்களாகலும் இருப்பார்கள். பலவகை அச்சக்கோளாறு உணர்வுகளாக (Phobia) மாறும். அச்ச உணர்வுத்தாக்கம் ஏற்பட்டால், அடுத்து என்ன செய்வதென்று செய்வதறியாமல் தடுமாற வைக்கும்.   • அனைத்து வேளைகளையும் அவர்கள் தவிர்ப்பார்கள். அச்சக்கோளாறு உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு வாழ்க்கையே மிகவும் முறையற்றதாக மாறிவிடும். இந்த நிலையை Agoraphobia அதாவது பொது இடங்களுக்கு, மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்கு போவதில் அச்சம் என்பார்கள்.   3. பல்வகை அச்சக் கோளாறு உணர்வுகள் (Phobia) பல்வகை வடிவங்களில் ஏற்படும் இவை (Phobia) அளவுக்கதிகமாக அச்ச உணர்வுகள் மட்டுமல்ல, அறிவுக்கு ஒவ்வாதவை.  ஒரு குறிப்பிட்ட அச்சக் கோளாறு உணர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை, சூழ்நிலையைக் கண்டு அஞ்சுவதாகும். பலர் ஏதோ ஒரு பொருளையோ, சுழ்நிலையையோ கண்டு, குறிப்பிட்ட தீவிரமான, காரணமற்ற அச்ச உணர்வைப் அடைவார்கள்.  உதாரணம்:   நாய்கள் - Cynophobia – Fear / Dislike of Dogs,   சுற்றிலும் அடைப்புள்ள இடங்கள் - Claustrophobia- Fear of confined, Closed spaces   பெண்களை கண்டால் பயம் - Gynophobia – fear of women  உயரமாக உள்ள இடங்கள் Acrophobia – Fear of Heights,   இயங்கும் படிக்கட்டுகள் (esculator), - Escalaphobia – Fear of Escalator,   மழையைக்கண்டால் பயம் - Ombrophobia – fear of rain  நீரைக்கண்டால் பயம் - Aquaphobia – fear of water. Distinct from hydrophobia, a scientific property that makes chemicals averse to interaction with water, as well as an archaic name for rabies,   விமானப்பயணம் - Pteromerhanophobia, - Fear of Fflying  இரத்த காயங்கள்  - Traumatophobia – Fear of War and Wounds,  போன்றவை மிகச் சாதாரணமான சில உதாரணங்களாகும்.  4 - சமுதாய அச்சக்கோளாறு – Social Anxiety  சமுதாய அச்சக்கோளாறு உணர்வு என்பது சமுதாயச் சூழ்நிலைகளில் தனக்குத் தாழ்வு ஏற்பட்டு விடுமென்று நினைப்பது, முக்கியமாக மற்றவர்கள் எதிரில் தனக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று ஒருவர் தீவிரமாக அஞ்சுவதாகும்.    சிறிய தவறுகளை கூட அவற்றின் உண்மை நிலைக்குப் புறம்பாக மிகைப்படுத்திக் எண்ணிக்கொள்வார்கள்..    நாணத்துடன் முகத்தை தாழ்த்திக்கொள்வார்கள், அவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் வருத்தத்துடன் வாழ்வதாக எண்ணிக்கொள்வார்கள், இப்படி வருந்துபவர்கள் மற்ற அனைவரின் பார்வையும் தன் மிதே குவிக்கப்பட்டிருப்பதாக நினைப்பார்கள்.    மேடையில் பேசவேண்டியிருந்தாலோ – (Stage Fear), சொற்பொழிவு- (Lecturer Class) தர வேண்டிய நிலை, முதலாளியுடனோ, பிற உயர் அதிகாரிகளுடனோ, புதிய நபர்களுடன் பேச (Feat of Meeting Higher Officials, New Peoples), சந்திக்க நேரிடும் நிலை ஏற்படும்போது இவர்கள் கொள்ளும் அச்ச உணர்வு வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.    சமுதாய அச்சக் கோளாறு உணர்வு அவர்களுடைய அன்றாட வழக்கமான வாழ்வைப் பெரிதும் பாதிக்கும். அது அவர்களுடைய தொழிலில், சமூக உறவுகளில் வளர்ச்சியை தடுக்கும்.   அச்சக் கோளாறுகளைப் பெரிதும் உடன்பெற்றிருக்கும் Agora Phobia என்பது அச்சத்தாக்குதலை உண்டு பண்ணும்,    ஏதோ ஒரு சிக்கலான சூழ்நிலையில் தான் இருப்பதாகவும், அந்த சூழ்நிலையிலிருந்து தன்னால் தப்புவது மிகவும் கடினம் அல்லது தப்பவே முடியாது என்று தீவிர அச்ச உணர்வு கொள்வதாகும்.   இந்த அச்சக் கோளாறு உணர்வுடையவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெகு தூரம் பயணம் செய்ய அஞ்சுவார்கள்.   அச்சத்தாக்குதல் (Panic Attack) ஏற்பட்டு விடும் என்றும் அதிலிருந்து தப்ப இயலாது என்றும் அத்தகு நிலையில் உதவி பெறுவது கடினம் என்றும் சில குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லவும் மாட்டார்கள், உதாரணமாக புகைவண்டி, இயங்கும் படிக்கட்டு, ஆகாய விமனம் முதலியவற்றில் பயணம் செய்யவும் அஞ்சி நடுங்குவார்கள்.  கவலை நோயின் அறிகுறிகள்  கவலையின் அறிகுறிகள் 1. மன நிலை அறிகுறிகள் – Mind Symptoms  மனக்கிளர்ச்சி – Confussions,  கவலையூட்டும் எண்ணங்கள் – Fearful Thoughts  அமைதியின்மை – Restlessness   இரைச்சலைக் கேட்க விரும்பாமை – Aversion to hear Sounds  மன உளைச்சல் -Stress  சரியாக எதிலும் மனத்தை ஒரு முகப்படுத்த முடியாமை – Not able to Concentrate Mind,  முன்கோபம் - Anger  2. உடல் நிலை அறிகுறிகள் – Phyical Symptoms  தலைசுற்றல் - Vertigo  இதயத்துடிப்பு அதிகரித்தல் – Increased Heart Beat,  தலைவலி – Head Ache,  குடல் இரைச்சல் – Abdominal Problems,  தசை வலி – Pain in Muscles,  அஜீரணம், செரிக்காமை – Indigestion, Gas Problems,  உடல் நடுக்கம், – Tremor,  மூச்சுத் தினறல் -  Breathing Problems  அடிக்கடி சிறுநீர் கழிதல் – Frequent Urination,  உணர்ச்சிகளில் பெருமாற்றங்கள் – Changes in Sensations   வயிற்று இரைப்பை உளைவு – Gas formation in Stomach,   பேதியாதல் – Loose Motion  கை, கால்கள் மரத்துபோதல்,- Numbness in Limbs  மார்பு கணத்து போகுதல் – Tightness of Chest,  3. உறக்கச் சிக்கல்கள் – Sleeping Disturbances • உறக்கம் வராமை – Loss of Sleep • கொடுங்கனவுகள் வந்து வருத்துவது. – Bad Horror Dreams,     கவலைக் கோளாறுகளால் வரும் பின்விளைவுகள்   கவலை கோளாறுகளுக்குப் பல பின் விளைவுகள் உள்ளன.    முதல் சிக்கல் பணி செய்யும் ஆற்றல் குறைந்து விடுவதாகும்.    உங்கள் பெற்றோர்களுக்கோ, உடன் பிறப்புகளுக்கோ இத்தகைய நிலை இருந்தால் உங்களுக்கும் கவலைக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.    சுற்றுச்சூழல் மற்றும் செயல் தடைகளும் இதில் முக்கிய பங்காற்றும்.    கவலையால் பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கு இதயவலி, புற்றுநோய் முதலிய தீவிர நோய்கள் இருப்பதாக எண்ணி தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இந்த எண்ணம் கவலையை மேலும் அதிகப்படுத்திவிடும்.    பெரும்பாலான சமயங்களில் கவலைக் கோளாறுகளின் உண்மையான காரணங்களைக் கூறுவது கடினமாகும்.    தனிப்பட்ட மலைநிலைப்போக்கு, வாழ்வின் மாற்றல்கள், சிறப்புச் சூழ்நிலைகள் போன்ற பற்றின் மன அழுத்தங்கலின் கவலையால்நோயாளி சாதாரணமாக மன உடைந்திருப்பார்.   மிகவும் முதிர்ந்து உச்ச நிலையில் உள்ளவர்கள் விசயத்தில், அவர்களால் எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்படும். அவர்கள் பள்ளிக்கோ, பணிக்கோ செல்லவே மாட்டார்கள்.    மனத் தொய்வு என்பது அடிக்கடி வரும் மற்றொரு பின் விளைவாகும்.    சூழ்நிலை மேன்மேலும் மோசமாகி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் அபாயமும் அதிகரிக்கும்.    போதைப்பொருள் தவறாகப்பயன்படுத்தப்படல் (Substance Abuse) என்பதும் ஒரு பின் விளைவாகும். போதைப் பொருளை தானே ஊசிமூலம் பயன்படுத்துதல் அல்லது மதுவுக்கு அடிமையாதல் இவற்றில் முக்கியமானவை..   பலர் தங்களுடைய நோய் அறிகுறிகளைக் கண்டும் காணததுபோல் பொறுத்துக் கொள்வார்கள். பைத்தியம் ன்று கருதப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால், அந்த அறிகுறிகளை, சிக்கல்களைக் நீக்க உளவியல் ஆலோசகரையும் மனநல மருத்துவரை சந்தித்துப் பேசவும் அஞ்சுவார்கள்.    உண்மையில் பார்க்கப் போனால் கவலை அல்லது அச்சம் உள்ள பெரும்பாலான, மக்களுக்கு மிக அரிதாகவே மனநோய் வரும். அதுமட்டுமல்ல, மருத்துவத்தாலும் உளவியல் ஆலோசனையினாலும் அவர்கள் சிக்கல்கள் குறையும் அல்லது மறையும்.   கவலைக் கோளாறு சிகிச்சை – Anxiety Disorder Treatment மனக்கவலை, அச்சம் கொண்டுள்ளவர்களுக்குப் பலவகைகளில் உதவ முடியும்:  மனோநிலை மருத்துவம் (Psychotherapy)  இது, வெளிப்படையாகத் தோன்றாத கவலைக்கான காரணங்களை கண்டறியவும், நன்கு புரிந்து கொள்ளவும் நோயாளிகளுக்கு உதவும் ஒரு மிகத் தீவிரமான பேச்சு மருத்துவமாகும் (Psychological Counseling). மருந்துகளோடு இனைந்தும், தனித்தும் சில குறிப்பிட்ட அறிவாற்றல் நடத்தை (Cognitive behavioural) முறைகள். மூலமும் சரிப்படுத்தலாம். இதை அனுபவம்  வாய்ந்த  உளவியல் ஆலோசகர் (Psychologist) மூலம் மேற்கொள்ளுதல் நல்லது  மருத்துவம்  கவலைக் கோளாறுகளின் மருத்துவத்திற்குப் பலவகை மருந்துகள் கிடைக்கின்றன. மேலே குறிப்பிட்ட முறைகளோடு கலந்து, மருந்துகள் பெரிதும் பயனளிக்கின்றன. மன அமைதிபடுத்துவன்(Tranquillers), மன அழுத்தத்தைத் தடுப்பவை (antidepressents) என்பவை சாதாரணமாகப் பயன்படுத்தப்படும். இருவகை மருந்துகளாகும்.  செலக்டிவ் செரோடானின் ரீஅப்டேக் இன்ஹிபிடர்ஸ் - Selective Serotonin Re-uptake Inhibitors (SSRI's) செரோடானின் நார்எபினெப்ரின் ரீஅப்டேக் இன்ஹிபிடர்ஸ் - Serotonin–Norepinephrine Reuptake Inhibitors (SNRI's) மற்றும் மோனோமைன் ஆக்ஸ்டேஸ் இன்ஹிபிடர்ஸ் உள்ளடங்கும். இரண்டு முதல் நான்கு வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தோன்றும்.   ஆனால் இந்த மருந்துகளை தொடர்ந்து உபயோகிப்பதால் பக்கவிளைவுகளும் பின்விளைவுகளும் தோன்றும்.   மன கவலை ஹோமியோபதி மருத்துவம்  நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகளை தொடர்ந்து உபயோகப்படுத்தினால் நல்ல பலன் பெறலாம். ஹோமியோபதி மருந்துகளுடன் உளவியல் ஆலோசனையும் சேர்த்து பெற விரைவான பலன் கிடைக்கும்.         கவலைக் கோளாறு சிகிச்சை – Anxiety Disorder Treatment உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும் உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம்   உளவியல் / மனநல ஆலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com   மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க. விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830  பண்ருட்டி:- 9443054168  புதுச்சேரி:- 9865212055 (Camp) மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com   முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.  முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – கவலைக் கோளாறு சிகிச்சை – Anxiety Disorder Treatment – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை, மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.



Anxiety Disorder - கவலைக் கோளாறுகள்

கவலையும் கவலைக் கோளாறுகளும்
  • பிரச்சனை அல்லது ஏதேனும் அபாயத்தைச் சந்திக்க நேரிடும்போது நாம் உணரும் ஒருவகை உணர்ச்சிதான் கவலை (Worries).

  • வேலையை சரியான நேரத்தில் செய்துமுடிக்காமை, போக்குவரத்து நெரிச்சலில் சிக்கிக் கொள்ளுதல், தேர்வுகள் எழுத பயம், தேர்வுமுடிவுகள் குறித்த கவலை, முதலிய மன அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளைச் சந்திக்க நேரிடும்போது நமக்கு கவலை தோன்றுகிறது.

  • உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே பார்த்தல், குரைத்தபடி கடிக்கவரும். நாயைக் காண்பது போன்ற திடீர் என்று எதிர்பாராத அச்சுறுத்தல்கள் ஏற்படும்போது அச்சம் உண்டாகிறது.

  • சாதாரனமாக கவலை கொள்ளுவது நல்லதே, ஏனெனில் அது நமது செயல்களை மேம்படுத்தவும், எதிர்கொள்ளும் சிக்கல்களைக் களைவதற்கும் உதவும்.

  • கவலை அதிகமாகும்போதும், நாம் நமது அன்றாட வேலைகளைச் செய்யும் திறமையை  பாதிக்கும் அளவுக்கு கவலை அதிகமானால் கவலைக் கோளாறுகள் ஏற்படுகின்றன.

  • எல்லாவித மனக்கோளாறுகளுக்கும் அடிப்படையானது கவலைக் கோளாறாகும்.

  • பெரும்பாலானோர் இதைக் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. ஒருவர் தனது மனவலிமையை பயன்படுத்தி கவலைக் கோளாற்று அறிகுறிகளை அவரால் அடக்கிவிட முடியும் என்று நினைக்கிறார். அறிகுறிகள் போக வேண்டும் என்று விரும்புவது சரியானதல்ல கவலையை நிரந்தரமாக போக்க உளவியல் ஆலோசனையும் .மருத்துவ ஆலோசனையும் வேண்டும்,


சாதாரண கவலைக் கோளாறுகள்.
சாதாரண கவலைக் கோளறுகள் பலவகைகள் உள்ளன. எனினும் இங்கு பொதுவாக வரும் சில திகில் கோளாறுகள் அச்சக் கோளாறுகள் மட்டும் பார்ப்போம்.

1. பொதுவகை திகில் கோளாறுகள் - Genaralized Anxiety Disorder - GAD
ஜெனரலைஸ்ட் ஆங்ஸைட்டி டிஸார்டர் (Genaralized Anxiety Disorder - GAD) என்பது, நாட்பட்ட, மிகைப்படுத்தப்பட்ட கவலை, மன உளைச்சலாகும்.

  • GAD உள்ள நோயாளிகள், பெரும் அழிவு வரப்போவதாக எதிர்பார்ப்பார்கள். தங்கள் உடல் நலன் குறித்தும், பணம், குடும்பம், பணி முதலியவற்றைக் குறித்தும் அளவுக்கு அதிகமாக கவலை கொள்வார்கள். கவலை என்பது அறிவுக்கு முரணானது என்பதை உணர்ந்தாலும் கவலை போக்க முடியாமலும் அமைதியாக ஓய்வெடுக்க முடியாமலும் தவிப்பார்கள்.

  • இவர்களுடைய கவலை, நடுக்கம், வலிப்புநோய், சதை இறுகல், தலைவலி, முன்கோபம், முறைத்துப்பார்த்தல் முதலிய உடல் அறிகுறிகளுடன் இணைந்து வரும்.

  • இவர்கள் தலைச்சுற்றல், மூச்சுத்திறைல், குமட்டல் முதலியவற்றை உணர்ந்து அடிக்கடி கழிப்பறைக்குச் செல்வார்கள்.

  • GAD தளர்ச்சியை உண்டாக்கி சாதாரண அன்றாட பணிகளைக் கூட செய்ய இயலாதவாறு செய்துவிடும்.

2. அச்சக் கோளாறுகள் – Fear Disorders.
அச்சக் கோளாறுகளுடையவர்கள், திடீரென அடிக்கடி அச்ச உணர்வுடன் இருப்பார்கள். அந்த உணர்வு எப்போது உண்டாகும் என்பதை கணிக்க இயலாதவர்கள்.

  • ஒவ்வொரு அச்ச உணர்வுகளுக்கும், சாதாரன நிகழ்வுகளுக்கும் இடையே தீவிர கவலையடைவார்கள். அடுத்த அச்ச உணர்வு, நிகழ்வு எப்போது ஏற்படுமோ என்ற கவலையுடனேயே இருப்பார்கள். எந்த நிமிடத்திலும் பயம் ஏற்படக்கூடும் என்ற தொடர்ந்த கவலையுடனேயே இருப்பார்கள்.

  • அச்சமூட்டும் பயம் ஏற்பட்டதும் அவர்களுடைய இதயம் கணத்துவிடும். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டும் மயக்கம், தளர்ச்சி, தலைச்சுற்றல் ஏற்படும். அவர்களுடைய கைகள் மரத்துப்போகும்.

  • உடலில் வியர்த்துக்கொட்டி சில்லிட்டுப்போகும். மார்பில் உளைச்சல் உணர்வு, திக்குமுக்காடுதல், பொய்மை உணர்வு, எல்லாமே ஊசலாடுவது போன்ற எண்ணம் அச்சம், கட்டுப்பாட்டுத் தன்மை இழுப்பு போன்றவையும் இருக்கும்.

  • தனக்கு, மாரடைப்பு ஏற்படுவதைப் போலவும், நெஞ்சு கணத்திருப்பதாகவும் இருப்பதாகவும், தான் மரணத்தின் விளிம்பில் நிற்பதாகவும் பாதிக்கப்பட்டவர் முழுமையாக நம்புவார்.

  • பொதுவாக இந்த அச்ச உணர்வுத் தூக்கம் ஏறத்தாழ இரண்டு மூன்று நிமிடங்கள் இருக்கும். சில சமயங்களில் பத்து நிமிடங்கள் வரையில் கூட இருக்கலாம். மிகவும் அரிதாக, ஒரு சிலரிடம் ஒரு மணி, அதற்குமேலும் நீடிக்கலாம்.

  • அச்சக்கோளாறு உள்ளவர்கள் பெரும்பாலும் மனச்சோர்வுடனும், மதுவுக்கு அடிமையானவர்களாகலும் இருப்பார்கள். பலவகை அச்சக்கோளாறு உணர்வுகளாக (Phobia) மாறும். அச்ச உணர்வுத்தாக்கம் ஏற்பட்டால், அடுத்து என்ன செய்வதென்று செய்வதறியாமல் தடுமாற வைக்கும்.

  • அனைத்து வேளைகளையும் அவர்கள் தவிர்ப்பார்கள். அச்சக்கோளாறு உள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு வாழ்க்கையே மிகவும் முறையற்றதாக மாறிவிடும். இந்த நிலையை Agoraphobia அதாவது பொது இடங்களுக்கு, மக்கள் கூட்டம் உள்ள இடங்களுக்கு போவதில் அச்சம் என்பார்கள்.


3. பல்வகை அச்சக் கோளாறு உணர்வுகள் (Phobia)
பல்வகை வடிவங்களில் ஏற்படும் இவை (Phobia) அளவுக்கதிகமாக அச்ச உணர்வுகள் மட்டுமல்ல, அறிவுக்கு ஒவ்வாதவை.
ஒரு குறிப்பிட்ட அச்சக் கோளாறு உணர்வு என்பது ஒரு குறிப்பிட்ட பொருளை, சூழ்நிலையைக் கண்டு அஞ்சுவதாகும். பலர் ஏதோ ஒரு பொருளையோ, சுழ்நிலையையோ கண்டு, குறிப்பிட்ட தீவிரமான, காரணமற்ற அச்ச உணர்வைப் அடைவார்கள்.
உதாரணம்:
Ø  நாய்கள் - Cynophobia – Fear / Dislike of Dogs,
Ø  சுற்றிலும் அடைப்புள்ள இடங்கள் - Claustrophobia- Fear of confined, Closed spaces
Ø  பெண்களை கண்டால் பயம் - Gynophobia – fear of women
Ø  உயரமாக உள்ள இடங்கள் Acrophobia – Fear of Heights,
Ø  இயங்கும் படிக்கட்டுகள் (esculator), - Escalaphobia – Fear of Escalator,
Ø  மழையைக்கண்டால் பயம் - Ombrophobia – fear of rain
Ø  நீரைக்கண்டால் பயம் - Aquaphobia – fear of water. Distinct from hydrophobia, a scientific property that makes chemicals averse to interaction with water, as well as an archaic name for rabies,
Ø  விமானப்பயணம் - Pteromerhanophobia, - Fear of Fflying
Ø  இரத்த காயங்கள்  - Traumatophobia – Fear of War and Wounds,
போன்றவை மிகச் சாதாரணமான சில உதாரணங்களாகும்.

4 - சமுதாய அச்சக்கோளாறு – Social Anxiety
சமுதாய அச்சக்கோளாறு உணர்வு என்பது சமுதாயச் சூழ்நிலைகளில் தனக்குத் தாழ்வு ஏற்பட்டு விடுமென்று நினைப்பது, முக்கியமாக மற்றவர்கள் எதிரில் தனக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ என்று ஒருவர் தீவிரமாக அஞ்சுவதாகும்.

v  சிறிய தவறுகளை கூட அவற்றின் உண்மை நிலைக்குப் புறம்பாக மிகைப்படுத்திக் எண்ணிக்கொள்வார்கள்..

v  நாணத்துடன் முகத்தை தாழ்த்திக்கொள்வார்கள், அவர்கள் இக்கட்டான சூழ்நிலையில் வருத்தத்துடன் வாழ்வதாக எண்ணிக்கொள்வார்கள், இப்படி வருந்துபவர்கள் மற்ற அனைவரின் பார்வையும் தன் மிதே குவிக்கப்பட்டிருப்பதாக நினைப்பார்கள்.

v  மேடையில் பேசவேண்டியிருந்தாலோ – (Stage Fear), சொற்பொழிவு- (Lecturer Class) தர வேண்டிய நிலை, முதலாளியுடனோ, பிற உயர் அதிகாரிகளுடனோ, புதிய நபர்களுடன் பேச (Feat of Meeting Higher Officials, New Peoples), சந்திக்க நேரிடும் நிலை ஏற்படும்போது இவர்கள் கொள்ளும் அச்ச உணர்வு வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.

v  சமுதாய அச்சக் கோளாறு உணர்வு அவர்களுடைய அன்றாட வழக்கமான வாழ்வைப் பெரிதும் பாதிக்கும். அது அவர்களுடைய தொழிலில், சமூக உறவுகளில் வளர்ச்சியை தடுக்கும்.

v  அச்சக் கோளாறுகளைப் பெரிதும் உடன்பெற்றிருக்கும் Agora Phobia என்பது அச்சத்தாக்குதலை உண்டு பண்ணும்,

v  ஏதோ ஒரு சிக்கலான சூழ்நிலையில் தான் இருப்பதாகவும், அந்த சூழ்நிலையிலிருந்து தன்னால் தப்புவது மிகவும் கடினம் அல்லது தப்பவே முடியாது என்று தீவிர அச்ச உணர்வு கொள்வதாகும்.

v  இந்த அச்சக் கோளாறு உணர்வுடையவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெகு தூரம் பயணம் செய்ய அஞ்சுவார்கள்.

v  அச்சத்தாக்குதல் (Panic Attack) ஏற்பட்டு விடும் என்றும் அதிலிருந்து தப்ப இயலாது என்றும் அத்தகு நிலையில் உதவி பெறுவது கடினம் என்றும் சில குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லவும் மாட்டார்கள், உதாரணமாக புகைவண்டி, இயங்கும் படிக்கட்டு, ஆகாய விமனம் முதலியவற்றில் பயணம் செய்யவும் அஞ்சி நடுங்குவார்கள்.

கவலை நோயின் அறிகுறிகள்

கவலையின் அறிகுறிகள்
1. மன நிலை அறிகுறிகள் – Mind Symptoms
Ø  மனக்கிளர்ச்சி – Confussions,
Ø  கவலையூட்டும் எண்ணங்கள் – Fearful Thoughts
Ø  அமைதியின்மை – Restlessness
Ø  இரைச்சலைக் கேட்க விரும்பாமை – Aversion to hear Sounds
Ø  மன உளைச்சல் -Stress
Ø  சரியாக எதிலும் மனத்தை ஒரு முகப்படுத்த முடியாமை – Not able to Concentrate Mind,
Ø  முன்கோபம் - Anger

2. உடல் நிலை அறிகுறிகள் – Phyical Symptoms
¬  தலைசுற்றல் - Vertigo
¬  இதயத்துடிப்பு அதிகரித்தல் – Increased Heart Beat,
¬  தலைவலி – Head Ache,
¬  குடல் இரைச்சல் – Abdominal Problems,
¬  தசை வலி – Pain in Muscles,
¬  அஜீரணம், செரிக்காமை – Indigestion, Gas Problems,
¬  உடல் நடுக்கம், – Tremor,
¬  மூச்சுத் தினறல் -  Breathing Problems
¬  அடிக்கடி சிறுநீர் கழிதல் – Frequent Urination,
¬  உணர்ச்சிகளில் பெருமாற்றங்கள் – Changes in Sensations
¬  வயிற்று இரைப்பை உளைவு – Gas formation in Stomach,
¬  பேதியாதல் – Loose Motion
¬  கை, கால்கள் மரத்துபோதல்,- Numbness in Limbs
¬  மார்பு கணத்து போகுதல் – Tightness of Chest,

3. உறக்கச் சிக்கல்கள் – Sleeping Disturbances
  • உறக்கம் வராமை – Loss of Sleep
  • கொடுங்கனவுகள் வந்து வருத்துவது. – Bad Horror Dreams,



கவலைக் கோளாறுகளால் வரும் பின்விளைவுகள்
v  கவலை கோளாறுகளுக்குப் பல பின் விளைவுகள் உள்ளன.

v  முதல் சிக்கல் பணி செய்யும் ஆற்றல் குறைந்து விடுவதாகும்.

v  உங்கள் பெற்றோர்களுக்கோ, உடன் பிறப்புகளுக்கோ இத்தகைய நிலை இருந்தால் உங்களுக்கும் கவலைக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

v  சுற்றுச்சூழல் மற்றும் செயல் தடைகளும் இதில் முக்கிய பங்காற்றும்.

v  கவலையால் பாதிக்கப்படுபவர்கள் தங்களுக்கு இதயவலி, புற்றுநோய் முதலிய தீவிர நோய்கள் இருப்பதாக எண்ணி தவறான முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். இந்த எண்ணம் கவலையை மேலும் அதிகப்படுத்திவிடும்.

v  பெரும்பாலான சமயங்களில் கவலைக் கோளாறுகளின் உண்மையான காரணங்களைக் கூறுவது கடினமாகும்.

v  தனிப்பட்ட மலைநிலைப்போக்கு, வாழ்வின் மாற்றல்கள், சிறப்புச் சூழ்நிலைகள் போன்ற பற்றின் மன அழுத்தங்கலின் கவலையால்நோயாளி சாதாரணமாக மன உடைந்திருப்பார்.

v  மிகவும் முதிர்ந்து உச்ச நிலையில் உள்ளவர்கள் விசயத்தில், அவர்களால் எதுவுமே செய்ய முடியாத நிலை ஏற்படும். அவர்கள் பள்ளிக்கோ, பணிக்கோ செல்லவே மாட்டார்கள்.

v  மனத் தொய்வு என்பது அடிக்கடி வரும் மற்றொரு பின் விளைவாகும்.

v  சூழ்நிலை மேன்மேலும் மோசமாகி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணமும் அபாயமும் அதிகரிக்கும்.

v  போதைப்பொருள் தவறாகப்பயன்படுத்தப்படல் (Substance Abuse) என்பதும் ஒரு பின் விளைவாகும். போதைப் பொருளை தானே ஊசிமூலம் பயன்படுத்துதல் அல்லது மதுவுக்கு அடிமையாதல் இவற்றில் முக்கியமானவை..

v  பலர் தங்களுடைய நோய் அறிகுறிகளைக் கண்டும் காணததுபோல் பொறுத்துக் கொள்வார்கள். பைத்தியம் ன்று கருதப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தால், அந்த அறிகுறிகளை, சிக்கல்களைக் நீக்க உளவியல் ஆலோசகரையும் மனநல மருத்துவரை சந்தித்துப் பேசவும் அஞ்சுவார்கள்.

v  உண்மையில் பார்க்கப் போனால் கவலை அல்லது அச்சம் உள்ள பெரும்பாலான, மக்களுக்கு மிக அரிதாகவே மனநோய் வரும். அதுமட்டுமல்ல, மருத்துவத்தாலும் உளவியல் ஆலோசனையினாலும் அவர்கள் சிக்கல்கள் குறையும் அல்லது மறையும்.


கவலைக் கோளாறு சிகிச்சை – Anxiety Disorder Treatment
மனக்கவலை, அச்சம் கொண்டுள்ளவர்களுக்குப் பலவகைகளில் உதவ முடியும்:

மனோநிலை மருத்துவம் (Psychotherapy)
Ø  இது, வெளிப்படையாகத் தோன்றாத கவலைக்கான காரணங்களை கண்டறியவும், நன்கு புரிந்து கொள்ளவும் நோயாளிகளுக்கு உதவும் ஒரு மிகத் தீவிரமான பேச்சு மருத்துவமாகும் (Psychological Counseling). மருந்துகளோடு இனைந்தும், தனித்தும் சில குறிப்பிட்ட அறிவாற்றல் நடத்தை (Cognitive behavioural) முறைகள். மூலமும் சரிப்படுத்தலாம். இதை அனுபவம்  வாய்ந்த  உளவியல் ஆலோசகர் (Psychologist) மூலம் மேற்கொள்ளுதல் நல்லது

மருத்துவம்
Ø  கவலைக் கோளாறுகளின் மருத்துவத்திற்குப் பலவகை மருந்துகள் கிடைக்கின்றன. மேலே குறிப்பிட்ட முறைகளோடு கலந்து, மருந்துகள் பெரிதும் பயனளிக்கின்றன. மன அமைதிபடுத்துவன்(Tranquillers), மன அழுத்தத்தைத் தடுப்பவை (antidepressents) என்பவை சாதாரணமாகப் பயன்படுத்தப்படும். இருவகை மருந்துகளாகும்.
Ø  செலக்டிவ் செரோடானின் ரீஅப்டேக் இன்ஹிபிடர்ஸ் - Selective Serotonin Re-uptake Inhibitors (SSRI's) செரோடானின் நார்எபினெப்ரின் ரீஅப்டேக் இன்ஹிபிடர்ஸ் - Serotonin–Norepinephrine Reuptake Inhibitors (SNRI's) மற்றும் மோனோமைன் ஆக்ஸ்டேஸ் இன்ஹிபிடர்ஸ் உள்ளடங்கும். இரண்டு முதல் நான்கு வாரங்கள் தொடர்ந்து பயன்படுத்த குறிப்பிடத்தக்க முன்னேற்றம் தோன்றும்.
Ø  ஆனால் இந்த மருந்துகளை தொடர்ந்து உபயோகிப்பதால் பக்கவிளைவுகளும் பின்விளைவுகளும் தோன்றும்.

மன கவலை ஹோமியோபதி மருத்துவம்
ü  நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகளை தொடர்ந்து உபயோகப்படுத்தினால் நல்ல பலன் பெறலாம். ஹோமியோபதி மருந்துகளுடன் உளவியல் ஆலோசனையும் சேர்த்து பெற விரைவான பலன் கிடைக்கும். 



கவலைக் கோளாறு சிகிச்சை – Anxiety Disorder Treatment
உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு  தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம்   உளவியல் / மனநல ஆலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் consult.ur.dr@gmail.comhomoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – கவலைக் கோளாறு சிகிச்சை – Anxiety Disorder Treatment – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.








==--==

Contact Form

Name

Email *

Message *