------------------------------------------------------------------------------

Professional Secrecy Will Be Maintained – We Keep Your Matters Confidential

------------------------------------------------------------------------------

September 13, 2013

என் வயது 20. என் பெரிய அம்மா மகள் வயது 15, இரவு என்னுடன்தான் படுத்து தூங்குவாள்.











கேள்வி:- என் வயது 20. என் பெரிய அம்மா மகள் வயது 15, இரவு என்னுடன்தான் படுத்து தூங்குவாள். சுடிதாரைத் தூக்கி அவளின் முதுகை தொட்டு உள்ளேன், ஆடையுடன் அவள் மார்பையும் தொட்டு உள்ளேன். அவள் ஏன் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை?  நான் அவள் மனதை கெடுத்து விட்டேனா? குழப்பமாக உள்ளது.

பதில்:- ஒரு ஆண் தவறான எண்ணத்துடன் ஒரு பெண்ணை தொடும்போது, பயத்தால் பல பெண்கள் செயலிழந்து விடுகிறார்கள். அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ள உறவினர் தவறான நோக்கத்துடன் தன்னை நெருங்கும்போது பல இளம் பெண்கள் செய்வதறியாது திகைத்து நடுங்கி விடுகிறார்கள். 

பயம், அருவெறுப்பு, கூச்சம், குழப்பம் இத்தகைய உணர்வுகளால் தாக்கப்பட்டு செய்வதறியாது திகைக்கிறார்கள். இதையே சம்மதம் என்று பல ஆண்கள் எண்ணி தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, வயதில் சிறியப் பெண்களைக் கெடுக்கிறார்கள். பல பாலியல் தவறுகள் நடப்பது நெருங்கிய உறவினர்களால் தான். 

வீட்டில் உள்ள பெரியவர்கள், இத்தகைய தவறுகள் எல்லாருடைய வீடுகளிலுமே நடக்கும் என்பதை கருத்தில் கொண்டு வளரிளம் பெண்களை யார் வீட்டில் தங்க அனுமதிக்கிறோம். யாருடைய அறையில் தன் பெண் தூங்குகிறாள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

இனிமேல் உங்கள் பெரிய அம்மா மகளுடன் ஒரே அறையில் தூங்க வேண்டாம். அவளாக முன்வந்தாலும் உறுதியுடன் மறுத்துவிடுங்கள். நல்ல நடத்தை வாழ்நாள் முழுவதும் சந்தோஷத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.



மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
97869 01830
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையம் ஹெல்த் லைன்












==--==

Contact Form

Name

Email *

Message *